கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கப்ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (12-02-2021) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி